சென்னை இஸ்ரேலிய திரைப்பட விழா இரத்து: மஜக,மார்க்சிய, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகளின் தொடர் அழுத்தம்

Date:

இம்மாதம் 29 ஆம் திகதி சென்னையில் ICAF நிறுவனத்தினால் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்ரேலிய திரைப்பட விழா இரத்து செய்யப்படுவதாக அதனுடைய ஏற்பாட்டாளர்கள் தமக்கு அறிவித்திருப்பதாக தமிழ்நாடு மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக காசாவில் மேற்கொள்ளப்படுகின்ற தொடர் அக்கிரமங்கள் படுகொலைகள் பட்டினிச்சாவுகள் இவைகளை கருத்தில் கொண்டு இத்தகைய கொடுமைகளுக்கு இலக்காகியுள்ள சமூகத்தின் நிலையை கருத்தில் கொண்டு இந்த திரைப்பட விழா நடத்தப்படக்கூடாது என அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த திரைப்பட விழா இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை உலகின் பல பாகங்களிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இன அழிப்புக்கு எதிராக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் நடைபெறவிருந்த இஸ்ரேலிய திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, மே 29-ம் தேதி நடைபெறவிருந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் (ம.ஜ.க) போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இஸ்ரேலிய திரைப்படங்களை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என மஜக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...