துருக்கி ஜனதிபதி அர்தூகானுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்

Date:

துருக்கிய ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் திங்களன்று பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

தொலைபேசி உரையாடல் மூலம் பேசிய துருக்கி ஜனாதிபதி அர்தூகான் ட்ரம்பை நாட்டுக்கு வருகை தருமாறு அழைத்தார்.

ட்ரம்பிடம் பாதுகாப்புத் துறைத் துறையில், வாஷிங்டனுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு துருக்கி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும், காசாவில் மனிதாபிமான நெருக்கடி ‘மோசமான நிலையை’ எட்டியுள்ளது, உதவி வழங்குவதற்கும் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கும் துருக்கியின் தயார்நிலையை  அர்தூகான் ட்ரம்பிடம் வெளிப்படுத்தினார்.

போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் அணுகுமுறைக்கு ஆதரவை வெளிப்படுத்திய அர்தூகான், ஈரானுடனான பேச்சுவார்த்தை செயல்முறையிலும் ரஷ்யா-உக்ரைன் போரை தீர்ப்பதிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை துருக்கி பாராட்டுவதாகக் கூறினார்.

சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் அதன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் துருக்கி பாடுபடுவதாக அர்தூகான் மேலும் கூறினார். இந்த செயல்முறைக்கு பங்களிக்க சிரியா மீதான தடைகளை தளர்த்துவதற்கான அமெரிக்க முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...