நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் 10 ஆசனங்களை வென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பான்மைப் பலத்துடன் காத்தான்குடி நகர சபையில் ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளது.
காத்தான்குடி நகர சபையின் தவிசாளராக எஸ்.எச்.எம். அஸ்பர், பிரதித் தவிசாளராக எம்.ஐ.எம்.ஜெஸீம் ஆகியோரை நியமித்துள்ளதாக கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ,பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அறிவித்துள்ளார்.
தவிசாளர் சாஹுல் ஹமீத் முஹம்மத் அஸ்பருக்கான நியமனக் கடிதத்தை கட்சியின் செயலாளர் கட்சித் தலைவர் ,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் முன்னிலையில் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் நேற்று (14) மாலை கையளித்தார்.
காத்தான்குடி நகர சபையின் 18 ஆசனங்களில் ஸ்ரீ ல மு கா 10, NPP 3, ஐக்கிய மக்கள் சக்தி 1, NFGG 2, இலங்கை தொழிலாளர் கட்சி 1, சுயாதீனக் குழு 1 ஆசனங்களை வென்றிருந்தன.