பல தசாப்த கால மோதலுக்கு முற்றுப்புள்ளி: துருக்கியுடனான ஆயுதப் போராட்டத்தைக் கைவிட குர்திஷ் போராளிக் குழு தீர்மானம்..!

Date:

நான்கு தசாப்த கால ஆயுத மோதலுக்குப் பிறகு, துருக்கியுடனான புதிய சமாதான முயற்சியின் ஒரு பகுதியாக, குர்திஷ் போராளிக் குழு இன்று (12) ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக ஒரு வரலாற்று முடிவை அறிவித்தது.

குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) எடுத்த இந்த முடிவை, அந்தக் குழுவிற்கு நெருக்கமான ஊடக நிறுவனமான ஃபிரத் செய்தி நிறுவனம் அறிவித்தது.

அங்காராவுடனான ஒரு புதிய சமாதான முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த பெப்ரவரி மாதத்தில்  1999 முதல் இஸ்தான்புல்லுக்கு அருகிலுள்ள ஒரு தீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள PKK தலைவர் அப்துல்லா ஓகலன், தனது குழுவை ஒரு மாநாட்டைக் கூட்டி முறையாகக் கலைக்க முடிவு செய்யுமாறு வலியுறுத்தினார்.

இத்தீர்மானம் 1980 களில் இருந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற பல தசாப்த கால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய படியாகும்.

மார்ச் 1 அன்று, PKK ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை அறிவித்தது, ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான சட்ட கட்டமைப்பை உருவாக்குவது உட்பட நிபந்தனைகளை விதித்தது.

இந்தக் குழு 1984 முதல் ஆயுதமேந்திய கிளர்ச்சியை வழிநடத்தி வந்ததடன்  போராட்டங்களால் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றது. இதனால் துருக்கி மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளால் ஒரு பயங்கரவாதக் குழுவாக பட்டியலிடப்பட்டது.

சிரியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், லெபனானில் ஹெஸ்பொல்லா குழுவின் போராட்டம் மற்றும் காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்ளிட்ட பிராந்தியத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றங்களின் பின்னணியில் குர்திஸ்தான் கட்சியின்
அறிவிப்பு வந்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...