புதிய உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் ஜூன் 2 இல் தொடங்கும்!

Date:

புதிய உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் ஜூன் 2 ஆம் திகதி தொடங்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் வென்ற இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விதம் குறித்து தேர்தல் ஆணைக்குழு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதற்கமைய, உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் விபரங்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு கட்சிகளுக்கு அறிவித்துள்ளது.

மேலும், பெரும்பான்மை அதிகாரம் கொண்ட உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள், நகரசபை தலைவர்களின் பெயர்களையும் சமர்ப்பிக்குமாறும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பிறகு, பெரும்பான்மை அதிகாரங்களைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள், நகரசபை தலைவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...