ஹெலிகொப்டர் விபத்து: 6 பேர் உயிரிழப்பு; 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு நியமனம்

Date:

சிறப்புப் படையினரின் வழக்கமான பயிற்சி பணிகளின் போது, இன்று காலை (09) மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் பெல் 212 ஹெலிகொப்டர் மோதியதில் ஆறு வீரர்கள் உயிரிழந்ததாக இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான விமானப்படையின் அறிக்கையில்,

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹிங்குராக்கொட தளத்தில் அமைந்துள்ள இலங்கை விமானப்படையின் 07 ஆம் இலக்க படைப்பிரிவைச் சேர்ந்த பெல்-212 ரக ஹெலிகாப்டர், இராணுவ விசேட படையணியினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்புக்கான செயல் விளக்கப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட அவசர சூழ்நிலை காரணமாக இன்று (மே 09, 2025) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளானது .

காலை 6.46 மணிக்கு ஹிங்குராக்கொட விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், மாதுரு ஓயா இராணுவ விசேட படைதளத்தில் இருந்து விசேட படைப்பிரிவின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் ஒரு விளக்கப் பயிற்சியை காண்பிக்க ஆறு விசேட படை வீரர்களுடன் பயணம் செய்த சொற்ப வேளையில் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து நடந்த நேரத்தில், இரண்டு விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் உட்பட 12 பேர் விமானத்தில் பயணித்திருந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆரம்ப சிகிச்சைக்காக அரலகங்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஹெலிகாப்டரில் இருந்த விமானப்படையை சேர்ந்து இரண்டு (Air Gunners) வான்வழி துப்பாக்கி வீரர்கள் மற்றும் நான்கு இராணுவ விசேட படை வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமான விபத்து குறித்து மேலும் விசாரணை நடத்த விமானப்படைத் தளபதி 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை நியமித்துள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...