இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது இடைநிறுத்தம்!

Date:

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து தொழிலுக்காக இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் கட்டுமானம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிப்புரிந்து வருகின்றனர்.
 இஸ்ரேலில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறைவடையும் வரை இலங்கையர்களைத் தொழில்களுக்காக அனுப்ப வேண்டாம் என டெல் அவிஸில் உள்ள இலங்கை தூதரகம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிக்கத்துக்குத் தெரிவித்துள்ளது.
இலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு செல்வதற்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...