இஸ்லாமிய மற்றும் அரபு மொழி ஆசிரியர்களுக்கான போட்டியில் இலங்­கையைச் சேர்ந்த முஹம்மத் சப்வான் சாதனை!

Date:

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இஸ்லாமிய மற்றும் அரபு மொழி ஆசிரியர்களுக்கு மத்தியில் நடை­பெ­ற்ற அல்­குர்ஆன் மனனப் போட்­டியில்
இலங்­கையைச் சேர்ந்த அஷ்ஷேக் முஹம்மத் சப்வான் முஹம்மத் பாரூக் (மதனி, அப்பாஸி) முதலாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மாத்தளை நிககொல்லையை பிறப்பிடமாக் கொண்ட அஷ்ஷெய்க் சப்வான் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கலா­பீடத்தில் ஷரீஆக் கல்வியை பூர்த்தி செய்து மதீனா இஸ்லாமிய சர்வதேச பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டவியல் பீடத்தில் முதற்தர சித்தியில் தனது கலைமாணி பட்டப் படிப்பை பூர்த்தி செய்து தற்போது சார்ஜாவில் அரபு மற்றும் இஸ்லாமிய ஆசிரியராக பணிபுரிகின்றார்.

பல்வேறு நாட்டைச் சேர்ந்த அரபு மற்றும் இஸ்லாமிய ஆசிரியர்கள் கலந்து கொண்ட இப் போட்டியில் இலங்கை ஆசிரியர் ஒருவர் இறுதிச் சுற்று வரை முன்னேறி முதலாவது இடத்தைப் பெற்றது முதற்தடவையாகும்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...