இஸ்ரேலிய தாக்குதலால் ஈரானில் உயிரிழந்தோர் நினைவாக இரங்கல் தெரிவிக்க ஈரான் தூதரகம் ஏற்பாடு!

Date:

ஜூன் 13 முதல் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இஸ்ரேலிய சியோனிச ஆட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஈரானில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த துயரமான சம்பவத்திற்கு, கொழும்பில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகம்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

அதேநேரம் உயிரிழந்தோருக்கான இரங்கலை வெளிப்படுத்துவதற்காக கொழும்பு-05, இல: 43, ஜாவத்தை வீதியிலுள்ள ஈரான் தூதரகத்தில் விசேட அனுதாபப் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை (30) மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை (01)காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை ஈரான் தூதரகம் திறந்திருக்கும்.

இரங்கல் செய்திகளை பதிவு செய்ய , இராஜதந்திரப் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் அழைக்கப்படுகின்றனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...