51ஆவது G7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஆரம்பம்

Date:

உலகின் மிக சக்திவாய்ந்த தலைவர்களை ஒன்றிணைக்கும் 51 ஆவது வருடாந்த G7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டாவில் நேற்று (16) ஆரம்பமானது.

மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் கனடாவை வந்தடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கனேடிய பிரதமர் மார்க் கார்னி பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பின்னர் G7 உச்சி மாநாடு இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும்.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, மெக்சிகோ, உக்ரைன் மற்றும் இந்தியாவின் தலைவர்களும் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் காலநிலை நடவடிக்கை உள்ளிட்ட உலகம் தற்போது எதிர்கொள்ளும் உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பில் இந்த உச்சிமாநாடு கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...