சிட்னியில் இடம்பெற்ற பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் தாக்கப்பட்ட கிறீன்ஸ் கட்சி உறுப்பினர் : ஒரு கண் பார்வை பறிபோகும் நிலை

Date:

பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் கைது செய்யப்படும்போது தாக்கப்பட்ட முன்னாள் கிறீன்ஸ் வேட்பாளர் ஹன்னா தாமஸ் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிட்னி தென்மேற்கு பகுதியிலேயே நேற்று இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் முற்படுகையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்போதே ஹன்னா தாமஸின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. 35 வயதான அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது சத்திரசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள கடுமையான போராட்ட எதிர்ப்பு சட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை குறிப்பாக பலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக போராடுபவர்களை பூதாகரமாக சித்தரிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டங்கள் பொலிஸாருக்கு கடும் வன்முறையை பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்கான துணிச்சலை வழங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் காரணமாக காசாவில் பொதுமக்கள் அனுபவிப்பதுடன் ஒப்பிடும்போது நான் அனுபவிப்பது ஒன்றும் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் காசாவில் காயங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உறுப்புக்களை மயக்கமருந்து இல்லாமல் துண்டிக்கும் நிலை காணப்படுகின்றது என  குறிப்பிட்டுள்ளார்.
ஹன்னா தாமஸ், கூட்டாட்சி தேர்தலின்போது கிரேண்ட்லர் தொகுதியில் பிரதமர் அந்தோனி அல்பானீஸியை எதிர்த்து, கிறீன்ஸ் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தார். அவரின் கண் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...