தரமற்ற மருந்து கொள்முதல்; முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த கைது!

Date:

தரமற்ற மருந்து கொள்முதல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில், முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (26) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வந்த நிலையில், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

 

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...