தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று ஆரம்பம்!

Date:

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை இன்று (30) முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை செயல்படுத்த தொடங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிடையில், ஆண்டின் கடந்த ஐந்து மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் மாதத்தில் 5,175 டெங்கு நோயாளிகளும், மே மாதத்தில் 6,025 டெங்கு நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்காக, 16 சுகாதார பிரிவுகளில் 95 பகுதிகளை உள்ளடக்கிய சிறப்பு நுளம்பு கட்டுப்பாட்டு திட்டம் மே 19 முதல் 24 வரை செயல்படுத்தப்பட்டது.

இதன்போது 128,824 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மைய நாட்களில் பெய்த தொடர் மழை காரணமாக டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது வாரத்திற்கு சுமார் 1,500 டெங்கு நோயாளிகள் பதிவாகி வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...