தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று ஆரம்பம்!

Date:

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை இன்று (30) முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை செயல்படுத்த தொடங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிடையில், ஆண்டின் கடந்த ஐந்து மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் மாதத்தில் 5,175 டெங்கு நோயாளிகளும், மே மாதத்தில் 6,025 டெங்கு நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்காக, 16 சுகாதார பிரிவுகளில் 95 பகுதிகளை உள்ளடக்கிய சிறப்பு நுளம்பு கட்டுப்பாட்டு திட்டம் மே 19 முதல் 24 வரை செயல்படுத்தப்பட்டது.

இதன்போது 128,824 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மைய நாட்களில் பெய்த தொடர் மழை காரணமாக டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது வாரத்திற்கு சுமார் 1,500 டெங்கு நோயாளிகள் பதிவாகி வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...