பலஸ்தீன விடுதலைப் போராட்டம் தொடர்பான மூன்று முக்கிய புத்தகங்கள் நாளை வெளியீடு

Date:

சிரேஷ்ட ஊடகவியலாளர் மகிந்த அத்தக எழுதிய ‘காசா இனப்படுகொலை’, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் எழுதிய ‘பலஸ்தீன்’ மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் லத்தீஃப் பாரூக் எழுதிய ‘பாலஸ்தீனத்திற்கான கண்ணீர் இல்லை’ (‘NO TEARS FOR PALESTINE’) எனும் மூன்று முக்கியமான புத்தகங்கள் நாளை (01 ஜூலை) வெளியிடப்படவுள்ளன.

இந்நிகழ்வு, இலங்கை உலகளாவிய நீதிக்கான பத்திரிகையாளர்கள் (Sri Lanka Journalists for Global Justice) அமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் லைட் ஹவுஸ் கேட்போர் கூடத்தில், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணிஎம்.எம்.ஸுஹைர் (PC) மற்றும் ஊடகவியலாளர்களான ஷெர்லி கந்தப்பா, தரிந்து உடுவரகெதர ஆகியோர் புத்தகங்களின் மதிப்புரைகளை வழங்குவர்.

இந்த மூன்று நூல்களும், பலஸ்தீனத்தில் நடைபெறும் தாக்குதல்கள், இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் சாட்சிகளாக அமைந்துள்ளன.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...