போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதல்? ஈரான் மறுப்பு

Date:

போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் 12 நாள்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று (24) அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது கடைசியாக ஒரு தாக்குதலை மேற்கொண்ட பிறகு போர்நிறுத்தம் அறிவிப்பதாக ஈரான் தரப்பு கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ஈரானில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் சைரன் சத்தங்கள் கேட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

போர் நிறுத்தத்தை மீறி ஈரான் தாக்குதல் நடத்தினால் தெஹ்ரான் அதிரும் என்று இஸ்ரேல் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் தாக்கினால் பதில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கான தகவல் எதுவும் இல்லை.

இந்நிலையில் இஸ்ரேல் இராணுவத்தின் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...