மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுமாறு இலங்கை வேண்டுகோள்!

Date:

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய கிழக்கின் சமீபத்திய நிலவரங்கள் குறித்து இலங்கை மிகவும் கவலை கொண்டுள்ளது.

பதற்ற நிலையைத் தணிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரையும் நாம் தொடர்ந்து கோரி வருகிறோம்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், தொடர்புபட்ட அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென்பதுடன், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், அதனைப் பேணவும் தீவிர இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடுவது அவசியமாகின்றது – என்று சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

நூல் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு

பஹன பப்ளிகேஷனின் 5வது வெளியீடாக வரும் “முஸ்லிம்களின் தேசத்துக்கான பங்களிப்புக்கள்” (අභිමානවත්...

வட மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை.

இன்றையதினம் (02) நாட்டின் வட மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள்...

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...

புத்தளத்தில் நிவாரணப் பணிக்கான மையமொன்றினை நிறுவ ஏன் தாமதம்?

நாட்டின் பல பகுதிகளில் சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...