அரசாங்கத்திற்கு ரூ. 1.7 மில்லியனுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் லக்‌ஷ்மன் யாப்பாவிற்கு குற்றப்பத்திரிகை

Date:

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இக்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவியேற்ற இரண்டாம் வருடத்தை நினைவுகூர, லக்ஷ்மன் யாபா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக இருந்த காலத்தில், இலங்கை முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தி பத்திரிகைகளில் விளம்பரங்கள் பிரசுரித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 1.7 மில்லியனுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

 

அதனடிப்படையில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள குறித்த இருவருக்கும் எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...