பலஸ்தீன சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி

Date:

பலஸ்தீனத்தின் சுதந்திரத்துக்காக இன்று (30) கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

பலஸ்தீன ஒருமைப்பாட்டு மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், கொழும்பு கொம்பனித்தெருவில் ஆரம்பித்து, அமெரிக்க தூதரகம் வரை பேரணியாக சென்று, அங்கு எதிர்ப்பு முழக்கங்களுடன் தொடரப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அரசியல் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

“பலஸ்தீனத்திற்கு சுதந்திரம்”, “தனி நாடு உருவாக்கப்பட வேண்டும்”, “இஸ்ரேல் மேற்கொண்ட யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

பலஸ்தீன மக்களின் நலன் மற்றும் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தும் இந்தப் பேரணியில், கலவரமின்றி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...