இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்களின் ‘மனச் சாட்சி’ நூல் வெளியீடு!

Date:

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பல்வேறு விடயப்பரப்புகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆற்றிய 54 உரைகளை உள்ளடக்கிய ‘மனச் சாட்சி’ எனும் பெயரிலான நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 25 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொள்ளும் ஓய்வுபெற்ற சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாலித பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் ஆகியோர்  நூல் குறித்த உரையை நிகழ்த்துவர்.

அன்றைய தினம் நூல் வெளியீட்டாளரான புத்தி வெளியீட்டகத்தினரால் விசேட சலுகை விலையில் நூலை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

(அஷ்ரப் ஏ.சமட்)

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...