இஸ்ரேலிய தாக்குதலால் ஈரானில் உயிரிழந்தோர் நினைவாக இரங்கல் தெரிவிக்க ஈரான் தூதரகம் ஏற்பாடு!

Date:

ஜூன் 13 முதல் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இஸ்ரேலிய சியோனிச ஆட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஈரானில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த துயரமான சம்பவத்திற்கு, கொழும்பில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகம்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

அதேநேரம் உயிரிழந்தோருக்கான இரங்கலை வெளிப்படுத்துவதற்காக கொழும்பு-05, இல: 43, ஜாவத்தை வீதியிலுள்ள ஈரான் தூதரகத்தில் விசேட அனுதாபப் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை (30) மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை (01)காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை ஈரான் தூதரகம் திறந்திருக்கும்.

இரங்கல் செய்திகளை பதிவு செய்ய , இராஜதந்திரப் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் அழைக்கப்படுகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...