இஸ்ரேலிய தாக்குதலால் ஈரானில் உயிரிழந்தோர் நினைவாக இரங்கல் தெரிவிக்க ஈரான் தூதரகம் ஏற்பாடு!

Date:

ஜூன் 13 முதல் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இஸ்ரேலிய சியோனிச ஆட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஈரானில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த துயரமான சம்பவத்திற்கு, கொழும்பில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகம்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

அதேநேரம் உயிரிழந்தோருக்கான இரங்கலை வெளிப்படுத்துவதற்காக கொழும்பு-05, இல: 43, ஜாவத்தை வீதியிலுள்ள ஈரான் தூதரகத்தில் விசேட அனுதாபப் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை (30) மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை (01)காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை ஈரான் தூதரகம் திறந்திருக்கும்.

இரங்கல் செய்திகளை பதிவு செய்ய , இராஜதந்திரப் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் அழைக்கப்படுகின்றனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...