இஸ்ரேல்-ஈரான் விவாதம் நடைபெறாமலேயே சபை ஒத்திவைப்பு

Date:

எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றில் நடைபெற இருந்த நிலையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 05.30 வரை நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாளை காலை 09.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த விவாதத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவால் ஒத்தி வைக்கப்பட்ட முன்மொழிவு கொண்டு வரப்பட்டது.
எனினும் அந்த முன்மொழிவு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தயாராகவிருந்த சந்தர்ப்பத்தில் அவர் சபையில் இருக்கவில்லை.
அதன் காரணமாக பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலியினால் நாடாளுமன்ற அமர்வை நாளை வரை ஒத்தி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Popular

More like this
Related

வியட்நாம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் செங்கம்பள வரவேற்பு

இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான...

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வருகை: பாராளுமன்றத்தில் விசேட உரை

வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின்...

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன அவரது வீட்டில் சடலமாக மீட்பு.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழை!

நாட்டின் தற்போதைய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும்...