51ஆவது G7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஆரம்பம்

Date:

உலகின் மிக சக்திவாய்ந்த தலைவர்களை ஒன்றிணைக்கும் 51 ஆவது வருடாந்த G7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டாவில் நேற்று (16) ஆரம்பமானது.

மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் கனடாவை வந்தடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கனேடிய பிரதமர் மார்க் கார்னி பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பின்னர் G7 உச்சி மாநாடு இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும்.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, மெக்சிகோ, உக்ரைன் மற்றும் இந்தியாவின் தலைவர்களும் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் காலநிலை நடவடிக்கை உள்ளிட்ட உலகம் தற்போது எதிர்கொள்ளும் உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பில் இந்த உச்சிமாநாடு கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...