சுகாதாரத் துறையில் தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவ சங்கத்தினர் நாளை பணிப்பகிஷ்கரிப்பு!

Date:

சுகாதாரத் துறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் சங்கத்தினர் (JCPSM) நாளை பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த விடயங்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட விவாதங்களில் ஈடுபடுவதை சுகாதார அமைச்சர் தொடர்ந்து தவிர்த்து வருவதாக JCPSM தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

துணை மருத்துவ சேவை பணியாளர்களின் பதவி உயர்வு தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதன்படி, முறையான கலந்துரையாடல் நடத்தப்பட்டு, அவர்களின் பிரச்சினைகள் நிவர்த்தி செய்ய உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், வேலைநிறுத்தத்தை கைவிடப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...