உறைந்து போன தாயின் உணர்வு: இஸ்ரேலிய தாக்குதலில் 9 குழந்தைகளைப் பறிகொடுத்த ஆலா அல்-நஜ்ஜாரின் கணவரும் உயிரிழந்தார்!

Date:

காசாவில் குழந்தை நல மருத்துவராக பணியாற்றிய ஆலா அல்-நஜ்ஜாரின் குடும்பத்தில் இன்னொரு பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவரது கணவரும்  உயிரிழந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கிசான் அல்-நஜ்ஜார் பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து கான் யூனிஸில் உள்ள அவர்களின் வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் அவர்களின் 10 குழந்தைகளில் 9 குழந்தைகள் இறந்தனர்.

தாக்குதல் நிகழ்ந்த நேரத்தில்  ஆலா, மருத்துவமனையில் தனது மருத்துவ பணியை மேற்கொண்டு வந்தார். ஆனால் அதே நேரத்தில் தனது சொந்த வீட்டில் குடும்பமே அழிந்துவிட்டது என்பதை அவர் அறியவே இல்லை.

கற்பனை செய்ய முடியாத  அளவுக்கு, டாக்டர் ஆலா  தனது ஒன்பது குழந்தைகளின் உடல்களையும் அடையாளம் காண முடியாத அளவுக்கு உறைந்து போனார்.

40 வயதான ஹம்தி அல்-நஜ்ஜார்  ஒரு மருத்துவர் – அவரது மூளை, நுரையீரல்,வலது கை மற்றும் சிறுநீரகத்தில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவருக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வந்ததாகவும் மருத்துவர் ஏஞ்சலோவா-சீ தெரிவித்தார்.

அந்தத் தம்பதியினரின் உயிர் பிழைத்த மகன் ஆதாமும் காயமடைந்தார். மருத்துவர் ஏஞ்சலோவா-சீ, அவர் “நியாயமான அளவில் நன்றாக” இருப்பதாக தனது சக ஊழியர்கள் தன்னிடம் கூறியதாகக் கூறினார்.

இந்த குடும்பத்தின் அழிவும், மரணங்களும் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இது போன்று ஒரு குடும்பத்தின் முழுமையான அழிவை மனித மனம் ஏற்றுக் கொள்வது அரிது.

 

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...