பலஸ்தீன விடுதலைப் போராட்டம் தொடர்பான மூன்று முக்கிய புத்தகங்கள் நாளை வெளியீடு

Date:

சிரேஷ்ட ஊடகவியலாளர் மகிந்த அத்தக எழுதிய ‘காசா இனப்படுகொலை’, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் எழுதிய ‘பலஸ்தீன்’ மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் லத்தீஃப் பாரூக் எழுதிய ‘பாலஸ்தீனத்திற்கான கண்ணீர் இல்லை’ (‘NO TEARS FOR PALESTINE’) எனும் மூன்று முக்கியமான புத்தகங்கள் நாளை (01 ஜூலை) வெளியிடப்படவுள்ளன.

இந்நிகழ்வு, இலங்கை உலகளாவிய நீதிக்கான பத்திரிகையாளர்கள் (Sri Lanka Journalists for Global Justice) அமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் லைட் ஹவுஸ் கேட்போர் கூடத்தில், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணிஎம்.எம்.ஸுஹைர் (PC) மற்றும் ஊடகவியலாளர்களான ஷெர்லி கந்தப்பா, தரிந்து உடுவரகெதர ஆகியோர் புத்தகங்களின் மதிப்புரைகளை வழங்குவர்.

இந்த மூன்று நூல்களும், பலஸ்தீனத்தில் நடைபெறும் தாக்குதல்கள், இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் சாட்சிகளாக அமைந்துள்ளன.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...