பலஸ்தீன விடுதலைப் போராட்டம் தொடர்பான மூன்று முக்கிய புத்தகங்கள் நாளை வெளியீடு

Date:

சிரேஷ்ட ஊடகவியலாளர் மகிந்த அத்தக எழுதிய ‘காசா இனப்படுகொலை’, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் எழுதிய ‘பலஸ்தீன்’ மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் லத்தீஃப் பாரூக் எழுதிய ‘பாலஸ்தீனத்திற்கான கண்ணீர் இல்லை’ (‘NO TEARS FOR PALESTINE’) எனும் மூன்று முக்கியமான புத்தகங்கள் நாளை (01 ஜூலை) வெளியிடப்படவுள்ளன.

இந்நிகழ்வு, இலங்கை உலகளாவிய நீதிக்கான பத்திரிகையாளர்கள் (Sri Lanka Journalists for Global Justice) அமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் லைட் ஹவுஸ் கேட்போர் கூடத்தில், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணிஎம்.எம்.ஸுஹைர் (PC) மற்றும் ஊடகவியலாளர்களான ஷெர்லி கந்தப்பா, தரிந்து உடுவரகெதர ஆகியோர் புத்தகங்களின் மதிப்புரைகளை வழங்குவர்.

இந்த மூன்று நூல்களும், பலஸ்தீனத்தில் நடைபெறும் தாக்குதல்கள், இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் சாட்சிகளாக அமைந்துள்ளன.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...