புத்தளம் ஸாஹிராவில் ஹிஜ்ரி புத்தாண்டு நிகழ்வுகள்..!

Date:

கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவின் வழிகாட்டலின்படி, ஹிஜ்ரி 1447வது முஹர்ரம் புத்தாண்டு ஆரம்பமானதை முன்னிட்டு நாடெங்கும் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் 27ஆம் திகதி பல்வேறு கலாசார மற்றும் சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.

அந்தவகையில், புத்தளம் ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நடைபெற்ற முஹர்ரம் புத்தாண்டு நிகழ்வில் புத்தளம் கல்வி வலயத்தின் புத்தளம் வடக்கு கல்விப் பணிப்பாளர், திருமதி அஸ்கா அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார்.

நிகழ்வின் தலைமை பொறுப்பை பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எஸ். ரஸாத் அவர்கள் வகித்தார். இந்நிகழ்வின் பிரதான பேச்சாளராக பஹன மீடியா பிரைவேட் லிமிடெட்டின் பணிப்பாளர், அஷ்ஷெய்க், எம்.எஸ்.எம். அப்துல் முஜீப் (கபூரி) அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் தனது உரையில், ஹிஜ்ரி புத்தாண்டின் முக்கியத்துவம், அது கற்றுத் தரும் பாடங்கள் குறித்து விளக்கினார். முஸ்லிம்களின் தனித்துவத்தை பேணுதல், வாழ்க்கையில் குறிக்கோள்களை அடைவதற்கு தியாகத்தின் அவசியம், சமூக நீதியை நிலைநாட்டுவதில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பிற சமூக உறுப்பு குழுக்களின் பங்கு போன்ற அம்சங்களை அவர் தனது உரையில் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் பாடசாலையின் முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், கிளைத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...