உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, இன்று (26) வியாழக்கிழமை மாலை வெள்ளிக்கிழமை இரவு ஹிஜ்ரி 1447 முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.
அவ்வகையில், 2025 ஜூன் மாதம் 27ஆம் திகதி, வெள்ளிக்கிழமை ஹிஜ்ரி 1447 முஹர்ரம் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.