ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற போர்வையில் கடந்த அரசாங்கங்களினாலும் பலர் முறைகேடாக விடுவிப்பு

Date:

கடந்த அரசாங்கங்களின் கீழ், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு, விடுதலைக்கு அனுமதிக்கப்படாத கைதிகள் குழுவொன்று, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் முறைகேடாக விடுவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த அரசாங்கங்களின்போது ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகளின் பட்டியலை பெற்று விசேட பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இந்த ஆண்டு வெசாக் பண்டிகைக்காக விடுவிக்கப்பட்ட 388 கைதிகளில், அங்கீகரிக்கப்படாத கைதிகள் குழுவின் பெயர்கள் இரகசியமாக சேர்க்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்கள் வெளியானதையடுத்து, இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும், வெசாக் பண்டிகை மற்றும் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ், ஒவ்வொரு ஜனாதிபதியினாலும் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்ட கைதிகளை விடுவிப்பது வழமை.

அபராதம் செலுத்துவதில் சிரமங்கள் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், தண்டனைக் காலம் முடியும் தருவாயிலுள்ள கைதிகளே, இவ்வாறு விடுவிக்கப்படுகின்றனர்.

ஆனால், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகளின் பட்டியலில் கடுமையான குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் பெயர்கள் திட்டமிட்டு உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சில காலமாக இரகசியமாக விடுவிக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்றும், நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் இருந்து ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, குற்றப் புலனாய்வுத்துறை தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

 

சிறைச்சாலை அதிகாரிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் செயல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதேவேளை, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட சந்தேகநபரான அநுராதபுரத்தைச் சேர்ந்த திலகரத்னவை கைதுசெய்ய பல புலனாய்வுக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...