மோசமான காலநிலையால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடுகள்

Date:

நாட்டில்,கடந்த சில தினங்களாகப் பெய்த கடும் மழை மற்றும் கடுமையாக வீசிய காற்று என்பவற்றால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக விவசாயிகள் காப்பீட்டு சபை மதிப்பீட்டு பணிகளை ஆரம்பித்துள்ளது.

நெல், சோளம், உருளைக்கிழங்கு, வெங்காயம், போஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகிய பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கே இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளன.இதற்காக ஐந்து ஏக்கர் வரை இழப்பீடுகள் வழங்கப்படும்.

விவசாயிகள் தங்கள் பயிர்ச் சேதம் குறித்து விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபையின் 1918 என்ற தொலைபே இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 100,000 ரூபா வரை காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.

நாட்டில் நிலவிய மோசமான காலநிலையால், மாத்தறை மாவட்டத்தில் சுமார் 100 விவசாயிகளுக்குச் சொந்தமான 130 ஏக்கர் நெல் வயல்கள் சேதமடைந்துள்ளதாகவும், இவர்களுக்கும் எதிர்வரும் வாரங்களில் நஷ்ட ஈடுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...