மோசமான காலநிலையால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடுகள்

Date:

நாட்டில்,கடந்த சில தினங்களாகப் பெய்த கடும் மழை மற்றும் கடுமையாக வீசிய காற்று என்பவற்றால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக விவசாயிகள் காப்பீட்டு சபை மதிப்பீட்டு பணிகளை ஆரம்பித்துள்ளது.

நெல், சோளம், உருளைக்கிழங்கு, வெங்காயம், போஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகிய பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கே இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளன.இதற்காக ஐந்து ஏக்கர் வரை இழப்பீடுகள் வழங்கப்படும்.

விவசாயிகள் தங்கள் பயிர்ச் சேதம் குறித்து விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபையின் 1918 என்ற தொலைபே இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 100,000 ரூபா வரை காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.

நாட்டில் நிலவிய மோசமான காலநிலையால், மாத்தறை மாவட்டத்தில் சுமார் 100 விவசாயிகளுக்குச் சொந்தமான 130 ஏக்கர் நெல் வயல்கள் சேதமடைந்துள்ளதாகவும், இவர்களுக்கும் எதிர்வரும் வாரங்களில் நஷ்ட ஈடுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...