மோசமான காலநிலையால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடுகள்

Date:

நாட்டில்,கடந்த சில தினங்களாகப் பெய்த கடும் மழை மற்றும் கடுமையாக வீசிய காற்று என்பவற்றால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக விவசாயிகள் காப்பீட்டு சபை மதிப்பீட்டு பணிகளை ஆரம்பித்துள்ளது.

நெல், சோளம், உருளைக்கிழங்கு, வெங்காயம், போஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகிய பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கே இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளன.இதற்காக ஐந்து ஏக்கர் வரை இழப்பீடுகள் வழங்கப்படும்.

விவசாயிகள் தங்கள் பயிர்ச் சேதம் குறித்து விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபையின் 1918 என்ற தொலைபே இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 100,000 ரூபா வரை காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.

நாட்டில் நிலவிய மோசமான காலநிலையால், மாத்தறை மாவட்டத்தில் சுமார் 100 விவசாயிகளுக்குச் சொந்தமான 130 ஏக்கர் நெல் வயல்கள் சேதமடைந்துள்ளதாகவும், இவர்களுக்கும் எதிர்வரும் வாரங்களில் நஷ்ட ஈடுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...