குழந்தை உயிருக்கு அச்சுறுத்தல்: ரூ.10 மில்லியன் கப்பம் கோரிய இருவர் கைது!

Date:

படல்கம, மல்லவகெதரவில் வசிக்கும் நபர் ஒருவரிடம் ரூ.10 மில்லியன் கப்பம் கேட்டு மிரட்டிய இருவரை நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஜூன் 9 ஆம் திகதி இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் கப்பம் செலுத்தப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவரையும் அவரது குழந்தையையும் கொலை செய்வதாகவும் சந்தேக நபர்கள் மிரட்டியதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சீதுவ காவல் பிரிவுக்குட்பட்ட தம்பத்துரை பகுதியில் ஜூன் 17 ஆம் திகதி அதிகாரிகள் சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

32 மற்றும் 46 வயதுடைய சந்தேக நபர்கள் மட்டியகனே மற்றும் கொட்டுகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் மேலதிக விசாரணைக்காக படல்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில் ஏற்கனவே குறித்த சந்தேகநபர்களுக்கு ரூ.2 மில்லியன் செலுத்தப்பட்டதாகவும் இந்த குற்றத்திற்காக இரண்டு திட்டமிட்ட குற்றவாளிகளின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும், முறைப்பாட்டாளரை மிரட்ட இந்த பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரியவந்தது.

கப்பம் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு பொம்மை துப்பாக்கி, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு புதிய மோட்டார் சைக்கிள் மற்றும் கப்பம் பெறப்பட்ட பணத்தில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு முச்சக்கர வண்டியையும் பொலிஸார் மீட்டனர்.

மேலும் பல கையடக்கத் தொலைபேசிகள், சிம் கார்டுகள், பல்வேறு வங்கிகளின் ஏடிஎம் கார்டுகள் மற்றும் வாகனம் தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Popular

More like this
Related

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன்...

இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கு சிறப்பாக பங்களிப்பு செய்து வரும் பஹன மீடியா- 7வது ஆண்டை கொண்டாடுகிறது.

மூத்த ஊடகவியலாளர் எம்.எஸ். அமீர் ஹூசைன் இலங்கை பல்லினங்களைக் கொண்ட ஒரு தேசமாகும். இந்த...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் உதவி

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிவரும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது...