குழந்தை உயிருக்கு அச்சுறுத்தல்: ரூ.10 மில்லியன் கப்பம் கோரிய இருவர் கைது!

Date:

படல்கம, மல்லவகெதரவில் வசிக்கும் நபர் ஒருவரிடம் ரூ.10 மில்லியன் கப்பம் கேட்டு மிரட்டிய இருவரை நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஜூன் 9 ஆம் திகதி இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் கப்பம் செலுத்தப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவரையும் அவரது குழந்தையையும் கொலை செய்வதாகவும் சந்தேக நபர்கள் மிரட்டியதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சீதுவ காவல் பிரிவுக்குட்பட்ட தம்பத்துரை பகுதியில் ஜூன் 17 ஆம் திகதி அதிகாரிகள் சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

32 மற்றும் 46 வயதுடைய சந்தேக நபர்கள் மட்டியகனே மற்றும் கொட்டுகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் மேலதிக விசாரணைக்காக படல்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில் ஏற்கனவே குறித்த சந்தேகநபர்களுக்கு ரூ.2 மில்லியன் செலுத்தப்பட்டதாகவும் இந்த குற்றத்திற்காக இரண்டு திட்டமிட்ட குற்றவாளிகளின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும், முறைப்பாட்டாளரை மிரட்ட இந்த பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரியவந்தது.

கப்பம் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு பொம்மை துப்பாக்கி, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு புதிய மோட்டார் சைக்கிள் மற்றும் கப்பம் பெறப்பட்ட பணத்தில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு முச்சக்கர வண்டியையும் பொலிஸார் மீட்டனர்.

மேலும் பல கையடக்கத் தொலைபேசிகள், சிம் கார்டுகள், பல்வேறு வங்கிகளின் ஏடிஎம் கார்டுகள் மற்றும் வாகனம் தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...