கொலன்னாவை நகர சபையில் குழப்பம்: சுசில் குமாரவின் கட்சி உறுப்பினர் பதவி இடைநீக்கம்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியில் இருந்து அதிக வாக்குகளைப் பெற்று கொலன்னாவ நகரசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுசில் குமாரவின் கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில், கொலன்னாவை நகரசபையின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை நியமிப்பதில் கட்சி நிர்வாகக் குழு மற்றும் கட்சி செயற்குழுவின் முடிவுக்கு இணங்க கட்சி செயல்படத் தவறியதன் காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் பதவி உடனடியாக இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (18) காலை முதன்முறையாகக் கூடிய கொலன்னாவ நகரசபையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சபையிலிருந்து வெளியேறிய நிலையில், இந்த நபர் மட்டுமே சபையில் இருந்து தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தார்.

இதன் விளைவாக கொலன்னாவை நகரசபையில் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைப் பெற்றது.

அந்த நேரத்தில், கொலன்னாவை நகர சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் தம்மிக்க விஜயமுனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே நேரத்தில் சமன் செனவிரத்ன துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...