5 ஆவது அக்கரைப்பற்று புத்தகக் காட்சி ஆரம்பம்

Date:

அக்கரைப்பற்றில் வருடாந்தம் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் புத்தகக் காட்சி இம்முறையும் உற்சாகத்துடன் 5ஆவது ஆண்டாக நடைபெற உள்ளது.

எதிர்வரும் ஜுன் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை அக்கரைப்பற்று நீர்ப்பூங்காவில் நடைபெறும் இப் புத்தகக் காட்சி வாசிப்பு பிரியர்களுக்கான ஒரு விழாக்காலமாக அமைவுள்ளது.

நூல் விற்பனை காலை 10.00 முதல் – காலை இரவு 10.00 மணி வரை நடைபெறுவதுடன் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையான நூல்கள் விற்கப்படவுள்ளன.

கல்வி, இலக்கியம், அறிவியல், சிறுவர் கதைகள், புனைகதை மற்றும் பல்வேறு பிரிவுகளுக்குரிய நூல்களும் விற்பனைக்கு உண்டு.

புத்தகங்களின் விலை அதிகம் என்ற கவலை வாசகர்களுக்கு இருப்பதாலும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இம்முறை விசேட விலைக்கழிவுகளும் உள்ளன.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...