இஸ்ரேலிய தாக்குதலால் ஈரானில் உயிரிழந்தோர் நினைவாக இரங்கல் தெரிவிக்க ஈரான் தூதரகம் ஏற்பாடு!

Date:

ஜூன் 13 முதல் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இஸ்ரேலிய சியோனிச ஆட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஈரானில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த துயரமான சம்பவத்திற்கு, கொழும்பில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகம்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

அதேநேரம் உயிரிழந்தோருக்கான இரங்கலை வெளிப்படுத்துவதற்காக கொழும்பு-05, இல: 43, ஜாவத்தை வீதியிலுள்ள ஈரான் தூதரகத்தில் விசேட அனுதாபப் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை (30) மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை (01)காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை ஈரான் தூதரகம் திறந்திருக்கும்.

இரங்கல் செய்திகளை பதிவு செய்ய , இராஜதந்திரப் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் அழைக்கப்படுகின்றனர்.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...