கண்டி மாவட்டத்தின் உடுநுவர, குருணாகல் மாவட்டத்தின் மாஹோ (மாஹோ, வாரியபொல, நிக்கவரட்டிய, கல்கமுவ, அம்பன்பொல, ஜாகம, பாலுகடவல, வல்பாலுவ, கனுக்கெட்டிய, அபுக்காகம மற்றும் அண்டிய பிரதேச சிறு கிராமங்கள்) மற்றும் போரா சமூகங்களுக்கான காதி நீதிபதிகளை நியமிப்பதற்கென தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை நீதிச் சேவைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.
விண்ணப்பதாரிகள் ஆணாக இருக்க வேண்டும் என்பதோடு, பல்கலைக்கழகப் பட்டதாரிகள், மௌலவிகள், அல் ஆலிம் சான்றிதழ் உள்ளவர்கள், சட்டத்தரணிகள், அரச சேவையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மாதச் சம்பளமாக 7,500 ரூபாவும் இதர செலவுகளுக்காக 6,500 ரூபாவும் வழங்கப்படும்.
விண்ணப்ப முடிவுத் திகதி 2025 ஜூலை 4 ஆம் திகதி, மேலதிக விபரங்கள் 2025 ஜூன் 06 ஆம் திகதிய வர்த்தமானியில்.