புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக எஃப்.யூ. வுட்லர் நியமனம்!

Date:

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக எப். யு. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்திலுள்ள பகின்க்ஹெம்சயர் (‍Buckinghamshire) பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தை பெற்றுக் கொண்ட அவர், இலங்கை பொலிஸில் கடமையாற்றும் போது 2015 டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பான முதுகலைப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

இந் நாட்டின் 30 வருட காலமாக நடைபெற்ற கொடூர யுத்த காலத்தின் போது யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாகவும், நீர்கொழும்பு தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகவும், வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவும், தொம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவும், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவும் சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...