சுகாதாரத் துறையில் தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவ சங்கத்தினர் நாளை பணிப்பகிஷ்கரிப்பு!

Date:

சுகாதாரத் துறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் சங்கத்தினர் (JCPSM) நாளை பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த விடயங்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட விவாதங்களில் ஈடுபடுவதை சுகாதார அமைச்சர் தொடர்ந்து தவிர்த்து வருவதாக JCPSM தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

துணை மருத்துவ சேவை பணியாளர்களின் பதவி உயர்வு தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதன்படி, முறையான கலந்துரையாடல் நடத்தப்பட்டு, அவர்களின் பிரச்சினைகள் நிவர்த்தி செய்ய உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், வேலைநிறுத்தத்தை கைவிடப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...