தரமற்ற மருந்து கொள்முதல்; முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த கைது!

Date:

தரமற்ற மருந்து கொள்முதல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில், முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (26) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வந்த நிலையில், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...