தரமற்ற மருந்து கொள்முதல்; முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த கைது!

Date:

தரமற்ற மருந்து கொள்முதல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில், முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (26) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வந்த நிலையில், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...