அஸ்வெசும கொடுப்பனவு; மேன்முறையீடு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு!

Date:

அஸ்வெசும கொடுப்பனவுக்காக மேன்முறையீடு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.

இந்நிலையில் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக பயனாளர்களிடம் இருந்து சுமார் முப்பதாயிரம் மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்றைய தினத்திற்கு பின்னர் குறித்த மேன்முறையீடுகள் மீளாய்வு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு குழவினரால் இந்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மீளாய்வு நடவடிக்கைகளின் பின்னர் அனைத்து பிரதேச செயலாகங்களின் ஊடாக மேன்முறையீடுகள் நலன்புரி நன்மைகள் சபைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அஸ்வெசும கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அல் குர்ஆன் மொழிபெயர்ப்பில் தீவிரவாதக் கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளதாம்; தடுமாறும் உலமாக்களின் மீள்பரிசீலனைக் குழு

 -அபூ அய்மன் மதம் சார்ந்த தவறான புரிதல் என்பது அறியாமையல்ல. அவை திட்டமிட்டவகையில்...

வெலிகம பிரதேச சபையின் வெற்றிடத்துக்கு சமீர தனுஷ்க டி சில்வா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா...

டெல்லி குண்டு வெடிப்பு: வெளிப்படையான, உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் வேண்டுகோள்

செங்கோட்டை வெடிச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்...

நம்பிக்கையை நசுக்கிய வரவு–செலவுத்திட்டம்: புத்தளம் மரிக்காரின் கவிதை வரிகள்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வரவு–செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி ஒதுக்கியுள்ள நிதித்திட்டங்கள் குறித்து...