துருக்கி உளவுப் பிரிவு தலைவரும் ஹமாஸ் தலைமைக் குழு தலைவரும் சந்திப்பு

Date:

காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வது பற்றியும் நிவாரண உதவி வழங்குவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடுவதற்காக துருக்கிய உளவுத்துறைத் தலைவர் ஞாயிற்றுக்கிழமை (29) ஹமாஸ் குழுவைச் சந்தித்ததாக துருக்கிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக அனடோலு செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

துருக்கிய தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் இப்ராஹிம் கலின், பலஸ்தீன ஹமாஸ் குழுவின் தலைமைக் குழுவின் தலைவரான முஹம்மது தர்விஷ் தலைமையிலான குழுவைச் சந்தித்ததாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.

காசாவில் மனிதாபிமான துயரம் குறித்தே சந்திப்பின் போது முதலில் விவாதிக்கப்பட்டது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

காசாவில் மனிதாபிமான துயரத்தையும் அழிவுகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் , நிவாரண உதவிகள் உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் சர்வதேச சமூகத்துடன் துர்கியே மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் இந்த சந்திப்பில் உரையாடப்பட்டது.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பலஸ்தீன குழுக்களிடையே ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...