‘கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்’நூல் வெளியீட்டு விழா!

Date:

‘கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப. 04:00 மணிக்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலை புதிய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

அஸ்ஷேக் எம்.டி.எம். ரிஸ்வி (மஜீதி) தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராசிரியர் எம்.சி.ஏ நசார் ((PhD), MCPM, LLB Senior Lecturer, South Eastern University of Sri Lanka) பங்கேற்கவுள்ளார்.

நிகழ்வின் முதன்மை உரையை  பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற மூத்த விரிவுரையாளர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் (PhD) அவர்களும் நூல் மதிப்புரையை  ஃபாத்திஹ் உயர் கல்வி நிறுவனத்தின் மூத்த விரிவுரையாளர்  ரவூஃப் ஜெயின்(PhD)அவர்களும்  நிகழ்த்தவுள்ளனர்.

இந்நூல், கல்குடா பிரதேச முஸ்லிம் சமுதாயத்தின் சமூக, கலாச்சார, வரலாற்று பின்புலத்தையும், அந்த சமூகத்தின் அழிவுகள், வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் ஆகியவற்றையும் ஆழமாகப் பதிவு செய்யும் முக்கியமான விழாவாக இருக்கப்போகிறது.

அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...