காசாவுக்கு எதிரான யுத்தம் தொடங்கியதில் இருந்து, மன உளைச்சல் காரணமாக இதுவரை 43 இஸ்ரேலிய வீரர்கள் தற்கொலை.

Date:

காசாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய போரின்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் பலர் உளவியல் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், போரின்போது ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளால் தற்கொலை செய்துக் கொண்ட இஸ்ரேலிய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை தற்போது 43 ஆக உயர்ந்துள்ளது என்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இது தொடர்பாக உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், “போரில் உள்ள பிரச்சனைகள், பயம், இரத்தம் மற்றும் மரணங்கள் போன்றவை பலரை மனதளவில் கடுமையாக பாதிக்கின்றன. நேர்மறையான சிகிச்சை இல்லையெனில், அவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்” என குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...