சபாத் இல்லத்தை அகற்றக்கோரி அட்டாளைச்சேனையில் ஆர்ப்பாட்டம்!

Date:

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் இஸ்ரேலியர் நடத்தி வரும்  “சபாத் இல்லத்தை” உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று (21) முன்னெடுக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2025ஆம் ஆண்டுக்கான முதலாவது (கன்னி) அமர்வில், தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமையில் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

அனைத்து உறுப்பினர்களும் இதுகுறித்து கருத்து தெரிவித்ததுடன், சபாத் இல்லத்தினை எதிர்த்து ஒருமனதாக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அத்தோடு சபை முடிவில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்போது பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பாதுகாப்புக்கும் மதசார்பற்ற துறையிற்கும் முரணான இத்தகைய அமைப்புகள் எதிர்கொள்ளப்பட வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

அரசே அறுகம்பை சபாத் இல்லத்தை உடன் அகற்று, இலங்கை அடுத்த பலஸ்தீனா?, இஸ்ரேலின் அடுத்த கொலனியாக இலங்கையை ஆக்க இடமளிக்காதே போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...