ஜம்இய்யதுல் உலமா ஏற்பாட்டில் சேனபுர-வவுனியா புனர்வாழ்வு மையத்தில் நடாத்தப்பட்ட ‘நல்லிணக்கமும், ஆரோக்கிய வாழ்வும்’ எனும் தலைப்பிலான வழிகாட்டல் நிகழ்ச்சி

Date:

2025.07.08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழு மற்றும் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு ஆகியவை இணைந்து ஒழுங்கு செய்த ‘நல்லிணக்கமும், ஆரோக்கிய வாழ்வும்’ எனும் தலைப்பிலான வழிகாட்டல் நிகழ்ச்சியானது சேனபுர-வவுனியா புனர்வாழ்வு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் ஆளணியினரான அஷ்-ஷைக் ஸபருல்லாஹ், சகோதரர் ரம்ஸி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

புனர்வாழ்வு பெறும் இளைஞர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தல், அவர்களிடையே நல்ல சிந்தனைகளை விதைத்தல் மற்றும் எதிர்காலத்தில் சிறந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்புதல் போன்ற குறிக்கோள்களின் அடிப்படையில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கடந்த 22 மணித்தியாலங்களில் கெஸ்பேவையில் 204 மி.மீ அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு

கடந்த 22 மணி நேரத்தில் கெஸ்பேவ பகுதியில் அதிகபட்சமாக 204 மி.மீ...

நாகரிக அரசியல் செய்யும் விஜய்: காதர் மொய்தீன் பாராட்டு!

இந்திய முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீனை முதல்வர் விஜய்...

வரலாறு படைக்கும் கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம்

கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற...

இலங்கையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ‘பௌத்த – முஸ்லிம் உரையாடல்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH-ல்

இலங்கையில் பல சமய, மத நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தும்...