நீதிமன்றில் சரணடைந்த நாமலுக்கு பிணை

Date:

நீதிமன்றத்தில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் செல்ல அம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிராக 2017ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை நகரில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, நீதிமன்ற உத்தரவை மீறி, பொது ஒழுங்கை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அம்பாந்தோட்டை பிரதம நீதவான் ஓஷத் மிகார நேற்று (28) பிடியாணை பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் மாலைத்தீவுக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு, நாடு திரும்பிய நாமல் ராஜபக்ஷ நகர்த்தல் மனுவொன்றின் ஊடாக நீதிமன்றில் முன்னிலையானதைத் தொடர்ந்து ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட பிணையின் கீழ் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ இன்று (29) முற்பகல் 11.30 மணியளவில் மாலைதீவின் மாலேயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 102 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அம்பாந்தோட்டை நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையின்படி, கட்டுநாயக்காவில் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், அவரது ஆதரவாளர்கள் குழு விமான நிலைய வளாகத்திற்கு வந்திருந்தனர்.

பின்னர் நாமல் ராஜபக்ஷ பி.ப. 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விசேட விருந்தினர்களுக்கான வழி ஊடாக அவர் வௌியேறினார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...