நீதிமன்றில் சரணடைந்த நாமலுக்கு பிணை

Date:

நீதிமன்றத்தில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் செல்ல அம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிராக 2017ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை நகரில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, நீதிமன்ற உத்தரவை மீறி, பொது ஒழுங்கை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அம்பாந்தோட்டை பிரதம நீதவான் ஓஷத் மிகார நேற்று (28) பிடியாணை பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் மாலைத்தீவுக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு, நாடு திரும்பிய நாமல் ராஜபக்ஷ நகர்த்தல் மனுவொன்றின் ஊடாக நீதிமன்றில் முன்னிலையானதைத் தொடர்ந்து ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட பிணையின் கீழ் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ இன்று (29) முற்பகல் 11.30 மணியளவில் மாலைதீவின் மாலேயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 102 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அம்பாந்தோட்டை நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையின்படி, கட்டுநாயக்காவில் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், அவரது ஆதரவாளர்கள் குழு விமான நிலைய வளாகத்திற்கு வந்திருந்தனர்.

பின்னர் நாமல் ராஜபக்ஷ பி.ப. 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விசேட விருந்தினர்களுக்கான வழி ஊடாக அவர் வௌியேறினார்.

Popular

More like this
Related

அல் குர்ஆன் மொழிபெயர்ப்பில் தீவிரவாதக் கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளதாம்; தடுமாறும் உலமாக்களின் மீள்பரிசீலனைக் குழு

 -அபூ அய்மன் மதம் சார்ந்த தவறான புரிதல் என்பது அறியாமையல்ல. அவை திட்டமிட்டவகையில்...

வெலிகம பிரதேச சபையின் வெற்றிடத்துக்கு சமீர தனுஷ்க டி சில்வா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா...

டெல்லி குண்டு வெடிப்பு: வெளிப்படையான, உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் வேண்டுகோள்

செங்கோட்டை வெடிச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்...

நம்பிக்கையை நசுக்கிய வரவு–செலவுத்திட்டம்: புத்தளம் மரிக்காரின் கவிதை வரிகள்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வரவு–செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி ஒதுக்கியுள்ள நிதித்திட்டங்கள் குறித்து...