பாராளுமன்ற உறுப்பினராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அப்துல் வாசித் சத்தியப்பிரமாணம்

Date:

மொஹமட் சரிபு அப்துல் வாசித் 10ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் இன்று (08)   சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியலின் ஊடாக பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு எம்.எஸ் அப்துல் வாசித் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதாக கடந்த ஜூலை 3 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கு அமைய பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

2000ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்த அவர் 2006ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொத்துவில் பிரதேச சபைக்குத் தெரிவுசெய்யப்பட்டார்.

இதன் பின்னர் 2011 மற்றும் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று பொத்துவில் பிரதேச சபையின் தலைவராகக் கடமையாற்றினார்.

அத்துடன், 2020 மற்றும் 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களிலும் இவர் போட்டியிட்டிருந்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...