பொரளை விபத்து; சாரதி கஞ்சா பாவித்தமை அம்பலம்.

Date:

பொரளை பொது மயான பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற விபத்தில் கைது செய்யப்பட்ட கிரேன் வாகன சாரதி கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலே குறித்த சாரதி போதைப்பொருள் பாவித்திருந்தமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்வத்தில் 6 மோட்டார் சைக்கிள்கள், 3 கார்களுடன் குறித்த பார வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயது நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...