ரி.பி. ஜாயா ஸஹிரா கல்லூரியில் வரலாற்றுச் சாதனை: 9A பெற்ற மாணவனுக்கு பாராட்டு நிகழ்வு

Date:

கொழும்பு ரி.பி. ஜாயா கொழும்பு ஸாஹிரா கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் (GCE O/L) சிங்கள மொழி மூலமாக 9 பாடங்களிலும் A சித்திகளைப் பெற்று எம்.ஐ. முஆத் அஹமட் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார்.

மாணவனை கௌரவிக்கும் வகையில்  ஜூலை 18 வெள்ளிக்கிழமை, ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் மாளிகாவத்தை மஸ்ஜிதுஸ் ஸலாம் ஜும்ஆ மஸ்ஜிதில் சிறப்புப் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்த கெளரவிப்பு நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர் எம்.ஜே.எம்.சியாத், பள்ளிவாசல் பிரதம இமாம் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் இம்ரான் மசூத், கொழும்பு மாநகர சபைத் உறுப்பினர் ஏ.எம்.ஜே.எம்.ஜெளபர், கொழும்பு மாவட்ட முஸ்லிம் விவாகப் பதிவாளர் பெளசுல் அலீம் பாரூக் அவர்களும் நினைவு பரிசுகளை வழங்கினர்.

மேலும் மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனத்தின் செயலாளர் எம்.எஸ்.எம். இல்யாஸ், பேட்டை மஸ்ஜித் கூட்டமைப்பின் செயலாளர் ஏ.எச்.எம். நாசர், மஸ்ஜிதுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி அல் ஹாஃபில் இமாறன் மஸ்ஹூத், செயலாளர் ஏ.எச்.எம். பைசர், உப தலைவர் இம்தியாஸ் நூர்தீன், உதவிச் செயலாளர் எம்.எச்.எம்.பைசல் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர், பிரதேசவாசிகள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...